சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் இருப்பிடத்துக்கு அருகில் வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சென்னை : சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் இருப்பிடத்துக்கு அருகில் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 20 மாநிலங்களில் கடந்த ஏப்.,11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக nvsp.in (national voters service portal) என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் படிவம் 6-ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் கள்ள வாக்குகளும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வாக்காளர் அடையாள அட்டை எண், திருமணமாகி வந்திருந்தால் உங்கள் மனைவியின் வாக்காளர் அட்டை எண், உங்களின் புகைப்படம் (jpeg or jpg format only), தற்போதைய முகவரி சான்று (jpeg or jpg), மற்றும் உங்களின் பிறந்த தேதிக்கான சான்றுகளுடன் (ஆதார் எண், etc) படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் உங்களின் கைப்பேசி எண்ணிற்கு Ref No. அனுப்பப்படும். மேலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நாம் இடத்துக்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர். 

Post a Comment

0 Comments