நாளை பஸ்கள் இயங்குவதில் சிக்கல்?


சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (ஏப்.,05) முழு அடைப்பு நடத்த தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்கப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் நாளை தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

      HASHIM
       STATEXPRESS

     statexpress256@gmail.com

Post a Comment

0 Comments